Wednesday, December 20, 2017

நோயாளியிடம் மாட்டிய டாக்டர் ----- நகைச்சுவை

உண்மையில்  வாய்விட்டு  சிரிக்கக்கூடிய  நல்லதொரு  நகைச்சுவை  இது . படித்து சிரித்துவிட்டு   உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் .


நோயாளியிடம் மாட்டிய டாக்டர்


Lady : உள்ளே வரலாமா டாக்டர்?

Dr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.

Lady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

Dr: பேர் என்னம்மா?

Lady : மஞ்சுளா!

Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

Lady : டாக்டர் அது என் பேரு!

Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!

Lady : குஞ்சு!

Dr: மொத்தமே அதுதான் பேரா?

Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

Lady : லூஸ் மோஷன்!


Dr : எப்படிப் போறான்?

lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்!

Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

Dr : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா?

Dr : சரி... சாப்ட்டானா?


Lady : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி விட்டுட்டேன்!

Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா.
இப்படி என்னை பாடா படுத்தாதீங்க.உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

Lady : இல்லைங்க.என் வீட்டுகாரர் துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு.

Dr: என்னம்மா இது..பையனுக்கு ரெண்டு வயசு தான்   ஆகுது.அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்.எப்படி இது?


lady : ச்சீசீ...அவர் இடைல ரெண்டு நாள் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பிரச்னைக்காக.

Dr : ஓஓஓஓ அப்படியா.! சரி,சொல்லுங்க ...

Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்.

Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?
நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்.!

Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்.

Dr : ஓ சாரி...

Lady : அதான் என் பையன சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?

Dr : ஐயோ ஆண்டவா.! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்.

Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்.

Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னுமா கொடுக்கறீங்க?


Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி.

Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா....

Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் தான் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.


Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை.பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

Dr : முருகா! ஏம்மா இப்படி சோதிக்கிறே.! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்!

Dr : ம் ...கொடுத்து வெச்சவன்!
சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?


Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க,பிரியாணி சாப்பிடலாமா?

Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?

Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது.சரி,உங்க பையன் எத்தனை தடவை போனான்?


Lady : எங்க டாக்டர்?

Dr : ம்! என் தலை மேல...லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ.நாலுதடவை போனான்.

Dr : தண்ணி மாதிரி போனானா?

Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா.

Dr : அம்மா இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்.இந்த மாத்திரைய மூனு வேளை தண்ணீல கரைச்சுக் குடுங்க.அப்புறம் இந்த பவுடர.....


Lady : பூசிவிடவா டாக்டர்?

Dr : ம். ஆமாம்,.அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க.சாவடிக்கறீங்களே.! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?
சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா.
ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா,திரும்ப வந்து எங்கிட்ட காட்டுங்க.


Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வரவா டாக்டர்?

Dr : அம்மா அங்காள பரமேஸ்வரி

Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்.

Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காட்டுங்கன்னு சொன்னேன்.புரிஞ்சதா?

Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்சக் காட்டணும்..?

Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது.வெளியில ஹ்ரிதிக் ரோஷன்னு கூப்பிடுவோம்.


Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க. எனக்கென்ன வந்துச்சு.!

Lady : டாக்டர், சாப்பாடு டயட் பத்தி சொல்லலியே?

Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ?

Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி.

Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்.

Dr : தாயே, இது உங்களுக்கு சொன்னேன். ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும் நீங்க டயட்ல இருக்கணும்.

Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் பிரியாணிய என்ன செய்ய?


Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

Lady : ஏன், அவங்க உங்க செட்டப்பா?

Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்.

Lady : டாக்டர் பீஸ்?

Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா.

Lady : அப்போ செட்டப்புதான்.நான் வரேன் டாக்டர்.

Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!


(நர்ஸ்…..லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு.)


இன்னுமொரு கொசுறு ……


cartoon


வருகின்ற வாரம் கிறிஸ்மஸ் ,புது வருட விடுமுறை  அதில் உங்களை  மீண்டும் புது பதிவுகளுடன் சந்திப்பேன் என்ற  நம்பிக்கையுடன் 

Sunday, December 10, 2017

தமிழக ஸ்டூடியோ புகைப்படங்களை காப்பாற்ற இணைந்த கைகள்!

இது பிபிசி தமிழோசையில் வந்த ஒரு தமிழகம் பற்றிய செய்தி .

இதை தயாரித்த பிரமிளா கிருஷ்ணன் ,பிபிசி தமிழ் இருவருக்கும் என் நன்றிகள் .பலருக்கும் தெரியவேண்டும் என்ற நோக்கில் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.பிபிசி  தமிழுக்கு சென்று செய்திகளைப் பாருங்கள் .அவர்களை ஊக்கப்படுத்துங்கள் .போதிய வரவேற்பு இல்லாதபடியால்  சிற்றலையில் ஒலிபரப்பி வந்த தமிழோசை  நிகழ்சிகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது . எனவே மிண்டும் கூறுகிறேன் அவர்களது தளத்துக்கு சென்று பாருங்கள் .கருத்துக்கள் பகிருங்கள் .அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

பரவட்டும் உலகெங்கும் தமிழ் .இனி  செய்தி


செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO

தமிழகம் முழுவதும் உள்ள நூறு பழமையான போட்டோ ஸ்டூடியோகளில் உள்ள அரிய புகைப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் நிதியுதவியுடன் பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சு ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுத்துவருகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் அறிமுகமான கேமரா தொழில்நுட்பம், இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பன்மடங்கு முன்னேறியுள்ள நிலையில், தற்போது செயல்பட்டு வரும் சுமார் என்பது முதல் நூற்று முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் ஸ்டூடியோக்களில் 1880 முதல்1980 வரை எடுக்கப்பட்ட கறுப்பு-வெள்ளை படங்களை ஆவணப்படுத்தும் வேலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் ஜோயி ஹேட்லி மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ரமேஷ்குமார் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை சுமார் பத்தாயிரம் பழைய புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் படம் எடுத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO

தென்னிந்தியாவில் போட்டோ ஸ்டூடியோக்கள் பற்றிய ஆய்வு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் முதன்மை ஆராய்ச்சியாளர் ஜோயி ஹேட்லி.

''தமிழகம் முழுவதும் எட்டு நகரங்களில் நூறு ஸ்டூடியோக்களில் உள்ள புகைப்படங்களை ஆவணப்படுத்தும்போது பல இடங்களில் புகைப்படங்கள் மிகவும் சேதம் அடைந்த நிலையில்தான் கிடைத்தன. ஸ்டூடியோக்கள் மட்டுமல்லாது பலரின் வீடுகளில் கூட பழைய புகைப்படங்களை கவனமில்லாமல் தாழ்வாரத்தில் வைத்திருந்தார்கள். பழைய பொருட்கள் விற்கும் சந்தைகளில் அற்புதமான, கலாசார ரீதியாக முக்கியத்துவம் பெற்ற புகைப்படங்களை நாங்கள் வாங்கினோம். பழமையின் அருமையும், மதிப்பும் தெரியாமல் சிலர் புகைப்படங்களை விற்றுவிட்டதைப் பார்க்கமுடிந்தது,'' என்றார் ஜோயி.

ஆய்வின் ஒரு பகுதியாக புகைப்படங்களை படம் எடுப்பது, பிலிம் நேகட்டிவ் அறிமுகமாகுவதற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கண்ணாடி நேகட்டிவ் துண்டுகளை சரிப்படுத்தும் முயற்சியும் எடுக்கப்பட்டுவருவதாக துணை ஆராய்ச்சியாளர் ரமேஷ் கூறினார்.

இரு குழந்தைகள்படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO

இந்த ஆய்வின் பயனாக கும்பகோணத்தில் 1879ல் தொடங்கப்பட்ட நல்லாப்பிள்ளை போட்டோ ஸ்டூடியோவில் இருந்த அறிய புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

நான்காவது தலைமுறையாக நல்லாப்பிள்ளை ஸ்டூடியோவை நடத்திவரும் ரங்கநாதன், ''என்னுடைய கொள்ளுத்தாத்தா எடுத்த படங்களின் நகல்களை இப்போது டிஜிட்டல் முறையில் ஆராய்ச்சியாளர்கள் படமாக்கித் தந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கண்ணாடி நெகடிவ் துண்டுகளை சேகரித்துக் கொடுத்துள்ளேன். இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் ஸ்டூடியோ தொழில் இருக்குமா என்று தெரியாது ஆனால் இந்த ஆய்வின் மூலம் பாதுகாக்கப்படும் படங்கள் என்றென்றும் ஸ்டூடியோக்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்,'' என்றார்.

1930ல் தொடங்கப்பட்டு சென்னை மைலாப்பூர் பகுதியில் ஒரு அடையாளமாக மாறிவிட்ட சத்தியம் ஸ்டூடியோவில், பழைய சென்னை நகரத்தில் இருந்த கட்டமைப்புவசதிகளை காட்டும் படங்கள் பத்திரப்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO

நாம் சத்தியம் ஸ்டூடியோவிற்கு சென்றபோது, அங்கு இன்றளவும் டாக்ரியோ என்ற பழங்கால காமெரா இருப்பதை பார்க்கமுடிந்தது.

தலைகீழாக தெரியும் உருவத்தை பார்த்து, போக்கஸ் செய்து, துணியைக் கொண்டு தங்களது தலையை மூடி, நிமிடங்களை எண்ணி புகைப்படங்களை எடுக்க பயன்பட்ட கேமராதான் டாக்ரியோ கேமரா என்று விளக்கினார் ஆனந்த். ''டாக்ரியோ கேமரா இருந்த வரலாறு சில புகைப்படக்காரர்களுக்கு கூட தெரியாத நிலைஉள்ளது. படம் எடுக்க ஒளி அமைப்பு பற்றி எந்த புரிதலும் இல்லாமல் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் புகைப்படம் எடுக்கலாம் என்ற நிலை இப்போது உள்ளது,''என்கிறார் மூன்றாவது தலைமுறையாக சத்தியம் ஸ்டூடியோவை நடத்திவரும் ஆனந்த்.

ஜோயி மற்றும் ரமேஷ்குமார் பல நாட்கள் வந்து ஸ்டூடியோவில் உள்ள விலைமதிப்பற்ற புகைப்படங்களை தூசிதட்டி அவற்றின் மதிப்பை விளக்கியதாகக் கூறுகிறார் ஆனந்த்.

செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்படத்தின் காப்புரிமைEAP AND IFP

''எங்களது முன்னோர்கள் ஹைதராபாத் நிஜாம் குடும்பத்திடம் அவைக்கலைஞர்களாக இருந்தனர். மெட்ராசுக்கு வந்த என் தாத்தா சத்தியநாராயண ராஜூ எடுத்த புகைப்படங்களில் ஹைதரபாத் நிஜாம் குடும்பத்தினரின் படங்களும் உள்ளன, பிரிட்டிஷ் காலத்தில் சென்னையில் நடந்த கோயில் தேரோட்டங்கள், பழைய சென்னை நகரத்தின் படங்கள் உள்ளன. டிஜிட்டல் படங்களாக இந்த பழைய படங்களை மாற்றியது எங்களுக்கு உதவியாக உள்ளது'' என்றார் ஆனந்த்.

ஸ்டூடியோ தொழில் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள்

பெரும்புகழ் பெற்ற இதுபோன்ற ஸ்டூடியோக்கள் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை விவரித்த ரமேஷ்,''பல ஸ்டூடியோக்கள் வண்ணப்படங்கள் தொழில்நுட்பம் வந்ததும் மூடுவிழா கண்டன. வண்ணப்படங்களை பிரிண்ட் செய்வதற்கு பெருமளவு முதலீடு செய்யவேண்டியிருந்தது. அதற்குப்பின்னர் வந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செல்போன் போன்றவை மக்கள் ஸ்டூடியோவுக்கு சென்று புகைப்படம் எடுக்கவும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு படம் எடுக்க ஆடர் கொடுக்க வேண்டாம் என்றும் முடிவை எடுக்கவைத்தது,'' என்றார்.

இறந்தோர் நிகழ்வு புகைப்படம்படத்தின் காப்புரிமைEAP AND IFPImage caption

இறப்புக்குப் பிறகு படமெடுத்துக்கொள்வது

ஸ்டூடியோ நடத்துவது என்பது மிகுவும் செலவுபிடிக்கும் தொழிலாக மாறிப்போனதால், பலரும் ஸ்டூடியோகளை மூடிவிட்டனர் என்றார் ரமேஷ்.

செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்

எல்லாம் செல்பி மயம்..தினமும் செல்பி எடுத்து தங்களது முகநூல் பக்கங்களில் பதிவிடுபவர்கள் இருக்கும் காலத்தில், ஸ்டூடியோ நடத்துவது என்பது சவாலான ஒன்று என்கிறார் நல்லாப்பிள்ளை ஸ்டுடியோவின் பொறுப்பாளர் ரங்கநாதன்.செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்

படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO

''என் தாத்தா, அப்பா கடை நடத்திய காலத்தில், ஒரு கேமராவில் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகள் வரை எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது தினமும் ஒரு புதிய கேமரா சந்தையில் அறிமுகம் என்பதால், நாங்களும் அதிக முதலீடு செய்து நவீன கேமராகளை வாங்கவேண்டிய கட்டாயம். அதோடு கணினி மென்பொருள் என பல செலவுகள் ஏற்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கும் அளவுக்கு செலவு, மிக குறைந்த லாபம், அதையும் முதலீடு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது,'' என்கிறார் ரங்காதான்.

செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்படத்தின் காப்புரிமைEAP AND IFP

இதுபோல பல ஸ்டூடியோக்கள் இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருப்பதால், குறைந்தபட்சமாக அந்த ஸ்டுடியோகளில் உள்ள விலைமதிப்பற்ற வரலாற்றுப் புகைப்படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சேகரித்துவைக்கும் வேலையை ஏற்ற ஆராய்ச்சியாளர்கள் புகைப்படக் கலைஞர்களின் குறிப்புகளையும் பதிவு செய்கிறார்கள்.

''நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோகளை பார்வையிட்டதில் பல ஸ்டூடியோகள் குடும்ப தொழிலாக இருந்தது தெரியவந்தது. பெண்கள் மட்டுமே நடத்திய ஸ்டூடியோகள் இருந்தன. புகைப்படங்கள் அறிமுகமான காலத்தில் இறந்தவர்களை படமெடுக்கும் பழக்கம் வந்தது. இறப்பு நிகழ்வுகளைப் படம் எடுப்பதற்காகவே பிரத்தியேக புகைப்படக்கலைஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் இறந்தவருக்கு மூன்றாவது நாள் பூஜையின்போது படம் கொடுக்கவேண்டும் என்பதால் அதிக கட்டணம் வசூலித்தனர்,'' என்றார் ரமேஷ்.

செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO

தமிழகத்தின் அரிய புகைப்படங்களையும், படம் எடுக்கும் கேமராவின் பின்பு நின்ற கலைஞர்களின் வரலாற்றையும் விரைவில் இணையத்தில் பதிவேற்றவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படியான பழைய புகைப்படங்கள் உங்களிடம் இருந்தால் இனி நீங்கள்  அதில் சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

நன்றி

Friday, December 01, 2017

புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு


 புகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்.காம் இணைய தளத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறீர்களா?

இனி ஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில், புகைப்படம் எடுப்பதற்காக வெள்ளிக்கிழமையன்று ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குள் புகைப்படத்தை அனுப்பி வைத்துவிட வேண்டும். பிபிசி தமிழ் பிரிவின் ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த புகைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழ் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

தலைப்புக்கு தகுந்த புகைப்படங்ளை எடுத்து அனுப்ப வேண்டும். ஒருவர் தான் எடுத்த புகைப்படங்களில் சிறந்த ஒரு புகைப்படத்தை மட்டும் அனுப்பவேண்டும்.


மின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், இமெயில் முகவரி, சமூக வலைதள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமிராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.

புகைப்படங்கள் நிழற்படக்கருவி கொண்டு மட்டுமே எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது கட்டாயம்.

வேறொருவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.


இந்த வாரத் தலைப்பு

முதல் வார புகைப்படப் போட்டிக்கான கரு: நீரும் நானும்!

நீரோடு உங்களுக்கு உள்ள உறவு, நீங்கள் நீரை எவ்வளவு நேசிக்கிறீர்கள், எந்தெந்தக் கோணங்களில் நேசிக்கிறீர்கள் என்பது உள்பட நீருடனான உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (08.12.2017) பகல் 12 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

ஈ-மெயில் முகவரி: bbctamizhosai@gmail.com

Tuesday, November 14, 2017

இப்படி ஒரு திருடர்களை கண்டதுண்டா ?

ல தரப்பட்ட திருடர்கள் உள்ள உலகில் இவைகளும் ஒரு வகையில் திருடர்கள் தான் .இப்படங்களை எடுத்த புகைப்படக்காரர் ஒரு சிறந்த கலைஞர்  தான் .இணையத்தில் கண்ட இந்த படங்கள் உங்களுக்காக இங்கே
பகிர்ந்திருக்கேன் .சிறு வயதில் இப்படி பலமுறை  எம் கையில்  அல்லது வாயில்  உள்ள உணவுப்பண்டங்களை காகம் கொத்திக்கொண்டு  சென்ற அனுபவம் எனக்கு உண்டு .உங்களுக்கும் இருக்கும் . இங்கே இந்த பறவைகளை பாருங்கள் , ஐஸ்கிரீமை எப்படி தட்டிச் செல்கின்றன.பாருங்கள்  ரசியுங்கள் .





















Saturday, September 23, 2017

பயனுள்ள தகவல்கள். பகுதி-- 01

சிறிது கால இடைவெளியில்  மறுபடியும் வலையுலகம் வந்திருக்கிறேன் எனது தளத்தில் பதிவிட்டது இல்லையே தவிர  தமிழ்மணம் பார்வை இடுவது  உண்டு .ஆனால்  யாருக்கும் கருத்திட்டது  இல்லை. இனி   தொடர்ந்து பதிவிடலாம். கருத்திடலாம் என எண்ணி இருக்கிறேன் .அரசியல் ,  சமூக தளங்களில் பல மாற்றங்கள். மாற்றம் இல்லாதது மாற்றம் தான் என சொல்லிக்கொண்டு மறு பதிவில் சந்திக்கிறேன்.

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு..!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே...!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

 இன்னும் வரும் ,மறு பதிவில்  சந்திக்கிறேன் .