த(கொ)லைக்கு விலை பேசும் முஸ்லிம்கள்!
ஜேர்மனியில் மறைந்து வாழும் ஈரான் நாட்டைச் சேர்ந்த "ராப்” இசைக்கலைஞரான ஷாஹின் நாஜாஃபிக்கு (Shahin Najafi) ஈரானிய ஷியா முஸ்லிம்கள் ம்ரணதண்டனை விதித்துள்ளனர்.
அவரது த(கொ)லைக்கு 100,000 டொலர் விலை வைத்துள்ளனர். ஈரானிய மதகுருக்களுக்கு எதிராகப் பாட்டெழுதிப் பொது மேடைகளில் பாடி வருவதால் நாஜாஃபி மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் இத் தண்டனையானதுத ஈரானிய ஷியா முஸ்லிம் சமூகத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய இமாம்களைப்(மதகுரு) பற்றி கேலி செய்யும் பாடல்களை நாஜாஃபி பாடியதால் அவரிற்கு ஈரானின் ஷியா சமயத் தலைவரான அயாதுல்லா சாஃபி (Ayatollah Safi) கோல்படுயகானி மரணதண்டனை விதித்து தீர்ப்பு கூறியதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. வெகுகாலமாக ஈரானிய சமயப் பெருமக்களோடு கருத்து வேறுபாடு கொண்டதனால் நாஜாபி 2005 முதல் ஜெர்மனியின் கோலோனில் மறைந்து வாழ்ந்து வந்தார்.
இந்த வருடம் மே மாதத்தில் “nagi” என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார் ஷாஹின் நாஜாஃபி. இப் பாடல் தொகுப்பில் ஈரானிய சமூகத்தைப் பற்றியும் ஈரானிய அரசியலைப் பற்றியும் விமர்சித்த பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்தே ஃபத்வா எனப்படும் சமயத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால் ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமியத் தீவிரவாதி யாராவது நாஜாஃபியைக் கொல்லும் ஆபத்து உள்ளது.
எனவே இவர் தற்போது காவல்துறையினரின் பாதுகாப்பில் இருக்கிறார். ஈரானின் ஷியா மதகுருவான சஃபி மீது காவல்துறையில் முறையீடும் செய்துள்ளார்.
இது தொடர்பாக நாஜாஃபி கூறும் பொழுது தனக்கு சமயத்தை(இஸ்லாத்தினை) இழிவுபடுத்தும் நோக்கம் எதுவுமில்லை என்றும், சமூக நடப்பையே தனது பாடலில் வெளிப்படுத்தியதாகவும், இதனைத் திரித்துக் கூறி தன் மீது வெறுப்பைப் பரவ விட்டிருப்பதாகவும் கூறினார்.
நான் இளைஞன், என்னால் இசைநிகழ்ச்சி நடத்தாமல் சும்மா இருக்க இயலாது என்றும் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளாமல் கருத்துக்களை வாளால் எதிர்கொ(ள்)ல்லும் சம்பவங்களின் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்களில் ஒரு சம்பவமே இது.
இது தொடர்பாக பத்திரிகையில் ( Newyork Times) வந்த செய்தியின் சுட்டி:-
http://www.nytimes.com/2012/05/15/world/middleeast/shanin-najafi-iranian-born-rapper-faces-death-threats-over-song.html?_r=0