Friday, June 15, 2012

கோக் vs பெப்சி:- குடிக்கலாம்- இரசிக்கலாம்

 


மேலே நீங்கள் பார்க்கும் படத்தில் காணும் கட்டடத்தின்,இரண்டாவது மாடியில் கொக்கா கோலா மென்பான நிறுவனத்தினர் தமது அலுவலகத்தினை அமைத்தனர்.தமது விளம்பரப் பலைகையினையும் நாட்டினார். இது நடந்து சில நாட்களின் பின்னர் அவர்களின் விளம்பரப்பலகையின் கீழே பெப்சி கம்பனி தனது விளம்பரப் பலகையை நிறுவியது அதிரடியாக.அதிலே இடம் பெற்ற வாசகங்களை படத்தினைப் பார்த்துப் படித்துகொள்ளுங்கள்.சரியான நெத்தியடி கோக்கிற்கு.


சரி இந்த சம்பவம் எங்கு நடந்தது? படத்தில் தெரியும் தமிழ் எழுத்துக்கள்,ஆட்டோ,பெண் போன்றவற்றினை வைத்து பார்த்தால் எங்கு நடந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? கோக்கிற்கும் பெப்சிக்கும் இடையில் இப்படி ஆரோக்கியமான விளம்பர போட்டிகள் அடிக்கடி நடப்பது எல்லோரும் அறிந்ததே.மேலே குறிப்பிட்டதை போல பெப்சிக்கும் கோக்கிற்கும் இடையில் நடைபெற்ற மற்றுமொரு சுவாரசியமான விளம்பரப் போட்டி.


ஒரு முறை கோக் கம்பனியின் விளம்பரம் இப்படி இருந்தது.ஒரு குரங்கு ஒரு பெரிய மரப்பலகையினை ஒவ்வொரு ஆணிகளாக எடுத்து சுத்தியல் மூலம் அறைந்து கொண்டு இருந்தது.கருமமே கண்ணாக ஒவ்வொரு ஆணியாக அறைந்துகொண்டிருந்த குரங்கின் அருகில் கோக் போத்தல்கள்.உடனே தொலைக்காட்சி திரையில் இந்தவாசகங்கள்.
"கடமையே கண்ணாக இருப்பவர்கள் அருந்துவது கோக்"


பார்த்தார்கள் பெப்சி கம்பனிகாரர்கள்.உடனேயே அவர்களும்கொண்டுவந்தார்கள் பதிலடியாக ஒரு விளம்பரம்.ஒரு கடற்கரை, குளியல் உடையில் ஆண்கள் பெண்கள்.ஒரு ஜீப் வருகிறது.அதில் நீச்சல் உடையில் இளம்பெண்கள்அமர்ந்திருக்க அவர்களின் மத்தியில் தொப்பி அணிந்தபடி கோக் விளம்பரத்தில் வந்தது போல ஒரு குரங்கு அதிரடி இசை ஒலிக்க. இப்போது திரையில் தெரிந்தன இந்த வாசங்கள்
"வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர்கள் அருந்துவது பெப்சி"


இது எப்படி இருக்கு? நான் பார்த்தவரையில் கோக்கின் தோற்றம் ,விளம்பரம் போன்றவற்றினை பார்த்தால் 35 வயது பெண்ணை பார்ப்பது போல ஒர் பிரமையும்.பெப்சியின் விளம்பரங்களை பார்த்தால்16 பெண்ணைபார்ப்பது போல் ஒரு பிரமையும் தெரிகின்றது.
ஹி.ஹீ,ஹீ . உங்களுக்கு எப்படி?


காதைக் கிட்ட கொண்டு வாங்கோ ஒரு ஜோக்.


ஒரு ஆராச்சியாளர் அடிக்கடி ஆராய்சிக்காக வடதுருவத்துக்கு போவார்.ஆனால் தனது உதவியாளார்கள் இருவரை மட்டும் அழைத்துப் போவார்.அதில் ஒருவர் 50 வயது பெண். கடிகாரம்,கலண்டர் எதுவும் எடுத்துப்போகமாட்டார் பேராசிரியார்.ஆனால் சரியாக ஆறாவது மாதம் தனது ஆராய்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பி விடுவார்.இப்படி அடிக்கடி நடக்க ஆச்சரியம் தாளாத ஆராச்சியாளரின் நண்பர் கேட்டார்.என்னப்பா நீ கலண்டர் ,கடிகாரம் கொண்டு போவதில்லை ஆனால்எப்படி சரியாக 6வது மாதம் வீடுதிரும்ப முடிகிறது என்று?ஆராச்சியாளர் சொன்னார் எல்லாம் அந்த 50 வயது பெண் உதவியாளார் மூலம் தான் என்று. நண்பருக்கு சந்தோஷம் தாளமுடியவில்லை.ஒரு கிளுகிளுப்பான கதை கிடைக்கப்போகிறதே என்று?ஆராச்சியாளார் சொன்னார் நண்பனே எப்போது அந்த 50வயது பெண் அழகாக எனக்கு தெரிகிறாளோ அப்போது நான் முடிவு செய்து கொள்வேன்,எனது ஆராய்ச்சியை முடித்து வீடு திரும்ப வேண்டிய காலம் வந்து விட்டது என்று.