Saturday, April 16, 2005

ரொரண்டோவில் இருந்து ஒரு நேரடி ஒளிபரப்பு

இன்று மாலை கனடாவின் ரொரன்ரோ மாநகரில் கனேடிய தமிழோசை வானொலி நடாத்தும் "அன்பின் அலைகள்"நிகழ்ச்சியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன் நிகழ்ச்சியானது ஈழத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டதாயக உறவுகளின் துயர்துடைக்கும் பொருட்டுநிதி சேகரிப்பின் பொருட்டு நடைபெறுகிறது.

ரொரண்டோவின் முன்ணனி இசைக்குழுக்களான வானம்பாடிகள் மற்றும் மெகாடியூனேர்ஸ் இசை வழங்க,இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட்தொகுத்து வழங்க, சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் இன் நிகழ்வானது கனேடிய தமிழோசை வானொலியின் இணையத்தளம் மூலமாக உலகெங்கும் ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.அன்பர்கள் பார்த்து மகிழ இதோ சுட்டி.
http://www.thamilosai.ca/