Friday, July 02, 2004

வெளிவந்த உண்மைகள்

உலக சுகாதார அமைப்பு அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடாத்தி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2001லிருந்து 2003 ஆண்டு இறுதிவரை மேற்கொண்ட இந்த ஆய்வில் மனநோயாளிகளை அதிகம் கொண்டநாடுகள் மற்றும் மனநோயாளிகள் எவ்வாறு தோன்றுகின்றனர் போன்ற
விபரங்களை திரட்டுவதற்காக 14 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அதிக மனநொயாளிகளைக் கொண்ட நாடு எது என்று கண்டுள்ளார்கள் தெரியுமா? நீங்கள் நினைக்கலாம் எதாவது ஒரு ஆசிய அல்லது ஆபிரிக்க நாடாக இருக்கும் என்று அதுதான் இல்லை.
எல்லாவிதத்தாலும் வளர்ச்சியடைந்த அமெரிக்காதான் அந்தநாடு. அமெரிக்காவில் மட்டும் 26.4 வீதமானவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக உக்ரேன் நாடு இரண்டாவது இடத்தினை வகிக்கிறது.மூன்றாவது இடம் பிரான்ஸ்க்கு கிடைத்துள்ளது.

14நாடுகளில் உள்ள மனநோயாளிகளின் விபரம்

1.அமெரிக்கா -26.4
2.உக்ரெயின் -20.5
3.பிரான்ஸ் -18.4
4.கொலம்பியா -17.8
5.லெபனான் -16.9
6.நெதர்லாந்து -14.9
7.மெக்சிக்கோ -12.2
8.பெல்ஜியம் -12.0
9.ஸ்பெயின் -9.2
10.சீனா -9.1
11.ஜேர்மனி -9.1
12.ஜப்பான் -8.8
13.இத்தாலி -8.2
14.நைஜீரியா -4.7


இந்த அறிக்கையினை பார்த்தால் பொருளாதார வளங்களில் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகளவான
மனநோயாளர் இருப்பதைக்காண முடிகிறது.இதற்கு காரணங்களாக பெரும்பாலும் தனிமை,போதை,வேலைவாய்ப்பின்மை,
தனிநபர்வன்முறைகள்.
குடும்ப உறவுகள் சீரின்மை,இயந்திரமயமான வாழ்க்கைமுறைகள்
என்பவற்றைக் கூறலாம். மேலைத்தேசத்தினரின் வாழ்க்கைமுறை பற்றி எங்கோ கேட்டது
"உனது பிள்ளையும்,எனது பிள்ளையும் சேர்ந்து எங்களுடைய பிள்ளைக்கு அடிக்கிறார்கள்"
இந்த ஒரே வரியில் அவர்களின் வாழ்க்கை முறைகள் புரிகிறது தானே.
எவ்வள்வுதான் வசதிகள்,பணம்
என்பன இருந்தாலும் மனதில் நிம்மதி வேண்டும்.கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகளுக்கிடையான உறவுகள் சீராக, பாசப்பிணைப்புடன் இருக்கவேண்டும்.எல்லாவற்றிலும் மேலைநாட்டவர்களை பின்பற்றும் எம்மவர்களுக்கு இவை சமர்ப்பணம்.


ஒரு முயற்சி

சில தினங்களுக்கு முன்னர் கூகிளில் ஒரு விடயம் சம்பந்தமாக தேடிக்கொண்டுஇருந்தேன்.பின்னர் கரிகாலன் என்றபெயரினை உள்ளிட்டு தேடிப்பார்த்தேன். முதலாவதாக எனது வலைபதிவையும்
பின்னர் வேறு பல தளங்களையும் பட்டியல் இட்டு காட்டியது.இரண்டாவது பக்கத்தில்
புகழ்பெற்ற தமிழர்கள் எனும் தலைப்பில் ஒரு தளத்தினையும் காணமுடிந்தது.தளத்தினுள் புகழ்பெற்றதமிழர்கள்
எனும் தலைப்பின் கீழ் பாரதியார்,கவிஞர் கண்ணதாசன்,பெரியார்,எம்.ஜி.ஆர்,வே.பிரபாகரன் போன்ற பலருடைய வாழ்க்கைவரலாறுகள் தொகுக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிந்தது.சிலருடைய விபரங்கள் மேலோட்டமாக உள்ளது. தளத்தில் பல விடயங்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து சிவசோதி சதீஷன் என்னும் ஒரு மாணவனால் இந்த தளம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக விபரம் உள்ளது.
புகழ் பெற்றதமிழர்கள் தொடர்பாக விபரங்கள் தருமாறு வேண்டுகோளும் காணப்படுகிறது.ஒரு மாணவனால் இப்படி ஒரு தளம் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.பல குறைகள் காணப்படினும் கூட.

Tuesday, June 29, 2004

அமைதி




உலக அமைதி

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்குகள் நூலிலிருந்து..........